தபால் நிலையத்தில் மோசடி: பெண் அதிகாரி கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் தபால் நிலையத்தில் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பெண் அதிகாரியைப் போலீசார் கைதுசெய்தனர்.
கோவை இருகூர் மார்க்கெட் ரோட்டைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சுபத்ரா (38). இவர்இருகூரில் தபால் நிலைய போஸ்ட் மாஸ்ட்டராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிறுசேமிப்பாகடெபாசிட் செய்தனர். ஆனால், இந்த திட்டத்தில் டெபாசிட் பணத்தை கணக்கில் காட்டாமல், சுபத்ரா ஒரு லட்சத்து 4 ,250 ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக தபால் உயர் அதிகாரி போலீசில் புகார் செய்தார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துசுபத்ராவைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications