தேர்தல் பணிக்கு 111 கம்பெனி போலீஸ்: டிஜிபி

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத் தேர்தல் பணிக்காக 111 கம்பெனிகள் அடங்கிய போலீஸ் படை ஈடுபடும் என டி.ஜி.பி ராஜகோபலன்தெரிவித்தார்.

கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக டி.ஜி.பி ராஜகோபலன் கூறியதாவது:

தமிழகத் தேர்தல் பணியில் தமிழகப் போலீஸ் படை மட்டுமின்றி மத்திய ரிசர்வ் போலீஸ்படை, அதிரடிப்படைஉள்பட பிற மாநிலப் போலீசாரும் ஈடுபடுகின்றனர். இந்தப் பணியில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலப்போலீசார் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக 6 ஆயிரத்து 730 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

சாதி, மதமோதல்கள் ஏற்படலாம் என அச்சம் உடைய வாக்குச்சாவடிகள் 3,437ம், அரசியல் கலவரத்திற்கானவாய்ப்பு உள்ளதாக 3,162 சாவடிகளும் உள்ளன.

வீரப்பன் அச்சுறுத்தல் உள்ள சாவடி என 94ம் நக்சலைட் அச்சுறுத்தல் சாவடி 37ம் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கோவையில் 100 சாவடிகள் உள்ளன.

காவல்துறையை நவீனப்படுத்த:

தமிழக காவல்துறையை நவீனப்படுத்த 68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 72 கம்ப்யூட்டர்கள், 434வாகனங்கள் இந்த தொகையில் வாங்கத் திட்டமிட்டுள்ளோம். போலீஸ் சங்கம் அமைப்பது குறித்து நான் எதுவம்கூறுவதற்கு இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+