நிலக்கோட்டையைப் பிடிப்பாரா பொன்னம்மாள்?
சென்னை:
நிலக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ்கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையில் சேர்ந்த அத்தொகுதியின் தற்போதையஎம்.எல்.ஏ. பொன்னம்மாள் கூறியுள்ளார்.
த.மா.கா.வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.எஸ்.பொன்னம்மாள். நிலக்கோட்டை தொகுதியின் எம்.எல்.ஏவாகஇருக்கிறார். அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டதை எதிர்த்துதுவக்கத்திலேயே குரல் கொடுத்தார்.
த.மா.கா.வுக்கு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் நிலக்கோட்டை இடம் பெறவில்லை என்று தெரிந்ததும்,ஆத்திரமடைந்த பொன்னம்மாள் ப.சிதம்பரத்தின் த.மா.கா. ஜனநாயகப் பேரவையில் சேர்ந்தார். அங்கு அவருக்குசீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் 2 சீட்கள் மட்டுமே ப.சிதம்பரம் அமைப்புக்கு ஒதுக்கப்பட்டது.இதனால் மீண்டும் ஏமாற்றத்திற்குள்ளானார் பொன்னம்மாள்.
தற்போது தனித்துப் போட்டியிடப் போவதாக பொன்னம்மாள் அறிவித்துள்ளார். நிலக்கோட்டைத் தொகுதிதாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியாகும். இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக பல நல்ல காரியங்களைச்செய்துள்ளார் பொன்னம்மாள் என்று தொகுதியில் பேச்சு உள்ளது. தனிப்பட்ட முறையிலும் தொகுதியில்செல்வாக்கோடு உள்ளார் பொன்னம்மாள்.
பொன்னம்மாள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது திமுக மற்றும் ப.சிதம்பரம் அமைப்புக்குதர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்னம்மாளை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றன.இருப்பினும் சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதி என பொன்னம்மாள் கூறி விட்டதாகத் தெரிகிறது.திங்கள்கிழமை அவர் நிலக்கோட்டை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
பொன்னம்மாள் தனித்துப் போட்டியிட்டால் திமுக கூட்டணிக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுக்கள் கணிசமானஅளவுக்குப் பிரியும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.