பா.ம.கவுக்குத் தாவினார் திமுக எம்.எல்.ஏ.
தர்மபுரி:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆண்டமுத்துபா.ம.க.வில் சேர்ந்தார்.
தர்மபுரிக்கு வந்திருந்த பா.ம.க. தலைவர் ராமதாஸ் முன்னிலையில் ஆண்டமுத்துபா.ம.க.வில் சேர்ந்தார்.
பின்னர் ஆண்டமுத்து நிருபர்களிடம் கூறுகையில்,
நான் உயர்நீதி மன்றத்தில் 25 ஆண்டுகளாக வக்கீலாகப் பணிபுரிந்தேன். 1987 முதல்தி.மு.க.வில் தீவிரமாக இருந்து வந்தேன். எனக்கு நடந்த பல இன்னல்களைக்கருணாநிதியிடம் சொல்லியும் பலனில்லை.
தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சிக்கு பவானிசாகர் தொகுதிகொடுக்கப்பட்டிருப்பதால் எனக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் தி.மு.க.வில் இருந்துவிலகி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காகப் பாடுபட்டுவரும் டாக்டர் அய்யாதலைமையில் பா.ம.க.வில் இணைந்துள்ளேன்.
என் தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வேன் என்றார்.
20 ஆண்டு காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்துவந்த பவானிசாகர்தொகுதியில் 1996 தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 25 ஆயிரம் ஓட்டுக்கள்வித்தியாசத்தில் ஆண்டமுத்து வெற்றி பெற்றார்.