For Daily Alerts
Just In
ஜெயலலிதாவை நிராகரித்த ஜெயா!
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் பெயரும் ஜெயா தான்.
3 காரணங்களின் அடிப்படையில் மனுவை அதிகாரி எஸ். ஜெயா நிராகரித்தார்.
காரணங்கள் விவரம்:
1. இரண்டு ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜெயலலிதாவுக்கு 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2. தீர்ப்பை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பையும் நிறுத்திவைக்கவில்லை.
3. ஒருவர் 2 இடங்களுக்கு மேல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது. ஆனால், ஜெயலலிதா 4இடங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்தக் காரணங்களால் தான் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரிப்பதாக அதிகாரி ஜெயா அறிவித்தார்.
Comments
parties admk karunanidhi jayalalitha actress stalin ramdoss pmk mdmk vaiko election political actor tamilnadu poes garden rajinikanth
Story first published: Tuesday, April 24, 2001, 5:30 [IST]