இலங்கை அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் வீட்டிற்கு அருகே வெடிகுணடுவெடித்ததால் அங்கு பீதி நிலவி வருகிறது.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வசித்து வரும் கோட்டை பகுதியில்எப்போதும் கடும் காவல் இருக்கும். புதன்கிழமை காலை அந்த பகுதியில் வெடிகுண்டுவெடித்தது.
கடும் பாதுகாப்பு உள்ள அந்த பகுதியில் வெடிகுண்டு வெடித்ததால் அங்கு பீதி நிலவிவருகிறது
இது குறித்து போலீசார் தெரிவிக்காையில். சென்ட்ரல் வங்கி பகுதியில் கை எறி குண்டுஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இதனால் எந்த பாதிப்பும் நிகழவில்லைஎன்றனர்.
நான்கு மாதமாக அறிவித்திருந்த சண்டை நிறுத்தத்தை விடுதலை புலிகள் வாபஸ்பெற்ற பின் நடந்த இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டை நிறுத்தத்தை விடுதலை புலிகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இலங்கைமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications