For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெற்றி பாதிக்கப்படாது: கூட்டணி கட்சி தலைவர்கள் கருத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளதால், தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படாது எனஅக்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதால், ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி,புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதுகுறித்து அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே சோகம்நிலவுகிறது. ஜெயலலிதா வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

த.மா.கா. தலைவர் மூப்பனார்:

ஜெயலலிதா வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இதனால்எங்களது கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. மக்கள் முன் எங்கள்கருத்துக்களை வைப்போம். மக்கள் நிச்சயம் எங்களது அணியை வெற்றி பெறவைப்பார்கள் என்று நம்புகிறோம்.

இந்திய தேசிய லீக் அப்துல் லத்தீப்:

இது தற்காலிகமானதுதான். சட்டசபைக்குள் நுழைய விடாமல் ஜெயலலிதாதடுக்கப்பட்டுள்ளார். இது எங்களது கூட்டணி வெற்றியைப் பாதிக்காது. மக்கள்நல்லாசியுடன் மீண்டும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு:

ஜெயலலிதாவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது வருத்தம் தருகிறது. இதுதுரதிர்ஷ்டமானது. இருப்பினும், வரும் தேர்தலில் இந்த மனு தள்ளுபடி விவகாரம்பெரிய அளவில் எங்களது வெற்றியைப் பாதிக்காது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சங்கரய்யா:

ஜெயலலிதாவின் வேட்பு மனு தள்ளுபடியாகி விட்டதால், மதச்சார்பற்ற கூட்டணியின்வெற்றி வாய்ப்பு மங்கி விடவில்லை. இதனால் எங்களது கூட்டணிக்கு தோல்விஏற்பட்டு விடாது. நச்சயமாக மே 10-ம் தேதி நடைபெறும் தேர்தலில் தி.மு.ககூட்டணி தோல்வியைத் தழுவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X