தென் ஆப்பிரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு
பிரிட்டோரியா:
தென் ஆப்ரிக்காவில் பகையாளிகளாக இருந்த இரண்டு தமிழ்ப் பிரிவுகளைஇணைத்துள்ளது தமிழ்ப் புத்தாண்டு.
ஸ்ப்ரிங்ஸ் தமிழ் அசோசியேஷன் மற்றும் பைரவி சங்கம் ஆஃப் ஸ்ப்ரிங்ஸ் என்ற இந்தஇரண்டு தமிழ்ப் பிரிவுகளும் முதன் முறையாக இணைந்து தமிழ்ப் புத்தாண்டு விழாவைஇணைந்து நடத்தின.
கவுட்டங் தமிழ் ஃபெடரேஷன் என்ற ஒரு அமைப்புதான் இந்த இணைப்புக்கு வழிவகுத்தது.
இனி வரும் அனைத்து விழாக்களையும் முக்கியமான நிகழ்ச்சிகளையும் இந்த இரண்டுபிரிவுகளும் இணைந்தே நடத்தவிருக்கின்றன.
இரண்டில் ஒன்று தென் ஆஃப்ரிக்காவில் இருக்கும் தமிழ் கோவில்களையும் மத,கலாசாரம் தொடர்பானவற்றையும் கவனித்துக் கொள்ளும். தமிழர்களுக்கானபள்ளிகளை நடத்துவதை மற்றொரு பிரிவு கவனித்துக் கொள்ளும்.
இது 5,012வது தமிழாண்டா அல்லது 5,013வது தமிழாண்டா என்ற சர்ச்சை கூடஒன்றும் எழுந்தது.
இதுகுறித்த முடிவை, வரும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் எட்டாவது உலகத் தமிழ்மாநாட்டில் 38 நாடுகளிலிருந்து வரும் தமிழ் சான்றோர்களே எடுக்கட்டும் என்றுஅந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தமிழ் பேசும் மக்கள் இங்கு அதிகமாக இருப்பதால், தமிழர்களுக்கான நிகழ்ச்சிகள்அதிக அளவில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று தென் ஆஃப்ரிக்காவில் உள்ளதொலைக்காட்சித் தயாரிப்பாளர்களுக்கு இந்நிகழ்ச்சியில் வேண்டுகோள்விடுவிக்கப்பட்டது.
சமீபகாலமாக வட இந்திய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தென்இந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும்.
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு மொழி, நடனம் மற்றும் இசையில் தேர்வுகள்நடத்தப்பட்டு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியில்முடிவெடுக்கப்பட்டது.
பெண்களுக்கான ஒரு அமைப்பும், தமிழ்ச் சமூகத்தினருக்குள் பொருளாதாரத்தைவளப்படுத்துவதற்காக ஒரு அமைப்பும் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
கவுட்டெங் தமிழ் அமைப்பின் தலைவராக நாகா முத்லி இருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.