பாண்டிச்சேரியில் பா.ம.க வேட்பாளருக்கு அடி-உதை
சென்னை:
பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவரது கார் அடித்துநொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
பாண்டிச்சேரி காசுக்கடை சட்டசபைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக மலர் மன்னன் என்பவர்போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில், பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து (முன்னாள் அமைச்சர்கண்ணனின் கட்சி) விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தவர். மீனவர்களிடையே செல்வாக்கு மிக்கவர்.
காசுக்கடை தொகுதியில் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் லட்சுமி நாராயணன்போட்டியிடுகிறார். இருவரும் தீவிரப் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு காசுக்கடை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மலர் மன்னன் ஓட்டு சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அங்கு வந்த பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையேதிடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பெரும் ரகளையாக மாறியது.
இதில் மலர் மன்னன் தாக்கப்பட்டார். அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டது. படுகாயமடைந்த மலர் மன்னன்உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் சாலைமறியலில் இறங்கினர். சம்பவ இடத்தில் பெரும் கலவரச் சூழல் நலவியது. போலீஸார் விரைந்து வந்து பாதுகாப்பைபலப்படுத்தினர்.
பாண்டிச்சேரி பகுதியில் பிரசாத்தில் ஈடுபட்டிருந்த பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் காசுக்கடைக்கு விரைந்துவந்தார். மலர் மன்னனை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திட்டமிட்டதாக்குதலில் மலர் மன்னன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். காசுக்கடை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியினர்பதில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என்றார்.
காசுக்கடை பகுதியில் தற்போது அமைதி நிலவி வந்தாலும் கூட பதற்றமான சூழ்நிலை உள்ளது. எனவே போலீஸார்அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.