தேர்தல் அதிகாரிகளை மிரட்டினார் கருணாநிதி: ஜெ. குற்றச்சாட்டு
மதுரை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா தாக்கல் செய்தவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு கருணாநிதிதான் காரணம் எனஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்,
ஊழல் வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதால் ஜெயலலிதாவின்வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்குகருணாநிதிதான் காரணம் என ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பும்முன் மதுரையில் செய்தியாளர்களிடம் ஜெயலலிதாகூறுகையில், கருணாநிதி தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதால்தான் என் வேட்புமனுக்கள் ஆண்டிப்பட்டியிலும், கிருஷ்ணகிரியிலும் நிராகரிக்கப்பட்டன.
கேரளத்தில் பாலகிருஷ்ண பிள்ளை ஊழல் செய்ததில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைபெற்றுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அங்கு ஜனநாயகம்பாதுகாக்கப்பட்டுள்ளது. இங்கு ஜனநாயகத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது.
நான் எனது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தலை நிறுத்திவைக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்கப்போவதில்லை. தொடர்ந்துஅ.தி.மு.க.கூட்டணியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வேன்.
எனது வேட்புமனுக்கள் நிராகரிக்ப்பட்டபோதும், நான் கேட்டுக் கொண்டபடிஅ.தி.மு,க தொண்டர்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கோவை பிரச்சாரம்:
கோவை மாவட்டத்தில் வியாழன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:
மீண்டும் தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வர சபதம் ஏற்றுள்ளேன்.உங்களுக்கு எனது வாழ்க்கையையே அர்ப்பணித்து விட்டேன். மக்கள் தான்எஜமானர்கள். மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான் இறுதியானது.
கருணாநிதி, தனது மகன் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் எனக் கருதி, என்னைபழிவாங்க பொய் வழக்குப் பதிவுசெய்தார். அதில் இரண்டாண்டுகள் தண்டனை எனஅறிவித்து தேர்தலில் நிற்க விடாமல் செய்து விட்டார் என்றார்.
உடுமலை பிரச்சாரம்:
உடுமலையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, கருணாநிதி கடந்த 96ம்ஆண்டு முதல் தனது குடும்பத்திற்கு 1400 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார்.
கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தியே தீருவோம். இந்த தேர்தலுடன்கருணாநிதி ஆட்சிக்கு மக்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா சொன்னார். அத்தகையஇதயத்தை மக்களாகிய நீங்கள் எனக்கு அளித்திருக்கிறீர்கள். தீயசக்திகள் என்றும்வென்றதில்லை. எனக்கு நீங்கள்தான் நீதி வழங்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications