அதிர்ச்சியில் இறந்த தொண்டர் குடும்பத் துக்கு ஜெ. இரங்கல்
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியால்இறந்து போன அ.தி.மு.கவின் கிளைத் தலைவரின் குடும்பத்திற்கு ஜெயலலிதா இரங்கல்தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட செய்தியை டிவியில் கேட்ட பொள்ளாச்சிஒரக்காளியூர் கிளை அ.தி.மு.க. செயலாளர் ரங்கநாதன் அதிர்ச்சியால் இறந்துபோனார்.. அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில்ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
எனது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய்அகால மரணமடைந்தார் என்ற செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
நாட்டு மக்களின் விருப்பம் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுதான். இதுஎனக்கு நன்கு தெரியும்.
என் வேட்புமனு நிராககிக்கப்பட்டதை கேட்டு வருத்தமடைந்த கட்சியினரும்,பொதுமக்களும் எனக்காக உயிரைவிடும் அளவுக்கு இருக்கிறார்களே என்பது எனக்குமிகுந்த வேதனையை கொடுக்கிறது.
ரங்கநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது சோகத்திலும், துக்கத்திலும் பங்கேற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications