கடும் போர்: 300 ராணுவ வீரர்கள், 20 புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் தொடர்ந்து நடந்துவரும் சண்டையில் இலங்கை தரப்பில் 1,200 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20விடுதலைப் புலிகளும் இதில் பலியாயினர்.
விடுதலைப் புலிகள் கடந்த 4 மாத காலமாக அறிவித்திருந்த சண்டை நிறுத்தம்செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. அவர்கள் சண்டை நிறுத்தத்தை வாபஸ்பெற்றதையடுத்து இலங்கை ராணுவம் அக்னிகிலியா என்ற பெயரில் யாழ்பாணத்தைமீட்க தாக்குதலை புதன்கிழமை தொடங்கியது.
புலிகளில் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதல் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விடுதலைப் புலிகளின் வானொலிச் செய்தியில், ராணுவம் முன்னேறுவதைவிடுதலைப் புலிகள் தடுத்து வருகிறார்கள். இது வரை 300 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 1,200க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
புலிகள் தரப்பில் 20 வீரர்கள் மட்டுமே கொல்லபட்டுள்ளனர். புலிகள் சென்றுகொண்டிருந்த வாகனம் தாக்கப்பட்டதாக சொல்வதும் தவறு. சண்டை நடந்து வரும்பகுதியிலிருந்து 30 ராணுவ வீரர்களின் உடல்களையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம்எனத் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காலையில் துவங்கிய தாக்குதல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுஎன ராணுவ அதிகாரிகள் கூறினாலும், விடுதலைபுலிகள் சண்டை 3வது நாளாகதொடர்து நடந்து வருகிறதுஎன தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கருணரத்னே கூறுகையில், ராணுவம்கைப்பற்றிய எலத்துமடுவில் பகுதியை பாதுகாப்பதிலும், சண்டையில் காயமடைந்தவீரர்களை மீட்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
இரண்டு நாட்களாக நடந்த கடும் சண்டையில் ராணுவ தரப்பில் 110 வீரர்கள்கொல்லப்பட்டனர். 382 வீரர்கள் காயமடைந்தனர். 150 விடுதலைபுலிகள்கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது. அந்தவாகனம் தாக்கப்பட்டதை புகைப்படமும் எடுத்துள்ளோம் என்றார்.
இந் நிலையில் சண்டையில் காயமடைந்த வீரர்கள் தொடர்ந்து விமானம் மூலம்மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறார்கள். அவர்களை காப்பாற்றும் முயற்சியில்மருத்துவர்கள் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்.
ஆனாலும் தேவையான அளவு ரத்தம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அரசுக்குசொந்தமான செய்தி தாளின் முதல் பக்கத்திலேயே மக்களை ரத்ததானம் செய்யுமாறுகேட்டு விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications