தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி
சிவகாசி:
தங்கள் தொகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தராததால் கிராம மக்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும்தி.மு.க.மற்றும் த.மா.கா. வேட்பாளர்கள் பிர சாரம் செய்ய கிராம மக்கள் தடை விதித்தனர்.
வெம்பக்கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமம் போடுரெட்டிபட்டி. இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளைசெய்து தருமாறு இந்த தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சொக்கரிடமும், பஞ்சாயத்து கவுன்சிலர் விஜயலட்சுமிமற்றும் பல அதிகாரிகளிடமும் இந்த கிராமத்து மக்கள் சில தினங்களுக்கு முன்பு புகார் மனு கொடுத்தனர்.
எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சி தலைவர் சாய்குமாரிடம்புகார் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 2 போர்வெல் குழாய் அமைப்பதற்காகவும், மேல்நிலை தண்ணீர்தொட்டி கட்டவும் மாவட்ட ஆட்சி தலைவர் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்திற்காக இந்த கிராமத்திற்கு சென்றார் தி.மு.க.வேட்பாளர் தங்கராஜ்.அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தர மறுத்த அரசை கண்டிக்கும் விதமாக அவரை தொகுதிக்குள் பிரச்சாரம்செய்ய மக்கள் அனுமதிக்கவில்லை.
தங்கராஜும் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பி சென்றார். த.மா.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ராஜகோபால் பிரசாரத்திற்கு வந்தபோதும் அவரையும் கிராம மக்கள் பிரச்சாரம் செய்ய தோகுதிக்குள்அனுமதிக்கவில்லை.
ஆனால் ராஜகோபால் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்த பின் அவரை பிரசாரம் செய்ய மக்கள்அனுமதித்தனர்.