போலி ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்திய பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அங்கீகாரம் பெறாமல் போலி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த பெண்ணை சென்னை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனரிடம், தமிழ்நாடு அரசு ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய டைரக்டர் கண்ணன் ஒரு புகார் கொடுத்தார்.அதில், நந்தனத்தில் போலி ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்தப்பட்டு வருவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும்கோரியிருந்தார். அதை ஏற்ற போலீஸ் கமிஷனர் காளித்து, தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

கமிஷனர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சாரங்கன், உதவி கமிஷனர் சக்தி வேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையின் விசாரணையில், ஞானம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி என்ற பெயரில் நந்தனம் சி.ஐ.டி.நகர்3-வது மெயின் ரோட்டில் போலிஆசிரியர் பயிற்சிப் பள்ளி நடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்துக் கூறப்படுவதாவது:

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பிரமிளா சந்திரசேகர் என்ற விஜயபானு. 26 வயதான இந்தப் பெண் ஒரு பட்டதாரி. பரங்கிமலையில் உள்ளஞானோதயா ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் கிளை என்று கூறி ஞானம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி என்ற பெயரில் நந்தனத்தில் போலி ஆசிரியர்பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்தார்.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தனர்.மாணவிகளிடம் கட்டணமாக, நன்கொடையாக ரூ. 2 லட்சம் வரை வசூலித்துள்ளார். மொத்தம் ரூ. 50 லட்சம் வரை இப்படிமோசடியாக வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த மோசடிப் பள்ளி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இயக்குநருக்குத் தகவல் வந்ததும் அவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.போலீஸார் தற்போது பிரமிளாவைக் கைது செய்துள்ளனர்.

சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் 15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+