டி. ராஜேந்தரின் கலக்கல் பிரசாரம் களைகட்டுகிறது
விழுப்புரம்:
டி.ராஜேந்தரின் அடுக்குமொழி வசனங்களில் திமுகவின் தேர்தல் பிரசாரம் களைகட்டி விட்டது.
விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் பொன்முடிக்கு ஆதரவாகவும், திண்டிவனம் தொகுதியில் திமுக வேட்பாளர்சேதுநாதனுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்த ராஜேந்தர் பேசுகையில்,
சர்ச்-பார்க் கான்வென்டில் படித்து, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் ஜெயலலிதாவுக்கு, நான்கு தொகுதிகளில்வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் எல்லாம் தள்ளுபடி ஆகிவிடும் என்பது எப்படித் தெரியாமல் போனது?
"சொன்னால்தான் காதலா? சொல்லாவிட்டால் அது காதல் இல்லையா?" என்று கேட்கலாம். சொல்லவேண்டியநேரத்தில் காதலைச் சொல்லிவிட வேண்டும்.
அதுபோல தேர்தல் நேரத்தில் கருணாநிதி செய்த சாதனைகளைச் சொல்லாவிட்டால் மக்களுக்குத் தெரியாமல்போய்விடும்.
உழவர் சந்தையை உருவாக்கினார் கருணாநிதி. ஆனால் ஊழல் சந்தையைத்தான் ஜெயலலிதா உருவாக்கினார்.கருணாநிதி ஆட்சியில் தமிழகம் தொழில்துறையில் முன்னேறியுள்ளது.
கருணாநிதி ஆட்சி போட்டது சாலை; ஜெயலலிதா சேர்த்ததோ சேலை.
சிறப்பாகச் செய்தவர் கருணாநிதி; செருப்புக்களாகச் சேர்த்தவர் ஜெயலலிதா.
கருணாநிதி ஆட்சியில் உழவர் சந்தை; ஜெயலலிதா ஆட்சியோ ஊழல் சந்தை.
தமாகா, பாமக, கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்த்தார் நேக்கா; இவர்களுக்கு அம்ம விட்டார் டூகா.
மனுத்தாக்கல் செய்தபோது ஜெயலலிதா தானாகவே தோண்டிக் கொண்டார் குழி; கருணாநிதி மேல் போடுகிறார் பழிஎன்று பேசி அசத்தினார்