ஜெ. மனு நிராகரிப்பு: ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறார் எஸ்.ஆர்.பி.
கோவை:
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடமுடியாமல் போனது ஈடு செய்ய முடியாதஇழப்பு என முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எஸ். ஆர்.பாலசுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேட்டுப்பாளையத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை பார்வையிடச் சென்றிருந்தஎஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கேரளாவில்பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தான் ஜெயலலிதாவிற்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
தண்டனையை நிறுத்தி வைத்திருக்கும் பட்சத்தில் அது எப்படி தண்டனையாக முடியும்?. அனுபவித்தால் தானேதண்டனை. எனவே ஜெயலலிதாவை தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்க வேண்டும். அவர் தேர்தலில்போட்டியிட முடியாமல் போனது ஈடு செய்யடியாத இழப்பாகும்.
சிதம்பரம் எவ்வளவு நாள் கட்சிக்காக உழைத்திருப்பார்? அவர் எந்த வகையிலும் கட்சிக்காகப் பாடுபட்டதில்லை.அவரது ஆதரவாளர்கள் ரங்கநாதன், வள்ளல் பொருமாள் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். அப்படி என்றால், அவர் பதவி ஆசைப்பட்டு தானே அவ்வாறு செய்திருக்கிறார்? என்றார்எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்.