கரூர் அருகே அரசு பஸ் -வேன் மோதல்: 3 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

கரூர்:

கரூர் அருகே அரசு பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர்காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்த விவரமாவது:

திருப்பூர் பெரியகடை வீதியைச் சேர்ந்வர் சீதாலட்சுமி (45), இவர்களது மகன் அசோக்குமார் (25), மகள் ஜெயந்தி (22), பானுமதி,லட்சுமி. இதே பகுதியில் வசித்து வருபவர் கேசவன். இவரது மனைவி நங்கையா மற்றும் குழந்தைகள் என இரு குடும்பத்தாரும் சேர்ந்துஒரு வேனில் சுற்றுலாவுக்குப் புறப்பட்டனர்.

இவர்கள் வேளாங்கன்னி, சமயபுரம் உள்பட பல்வேறு இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். கரூர் அருகே உள்ள பரமத்திக்குஅருகில் இவர்கள் சென்றபோது எதிரே கரூரிலிருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேனில் சென்ற சீதாலட்சுமி, டிரைவர் ராமசாமி,நங்கையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

வேனில் சென்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+