சூடுபிடிக்குது தேர்தல் பிரசாரம்
சென்னை:
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி சட்டசபைக்கு வரும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின்தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.
அகில இந்தியத் தலைவர்கள் தமிழகத்தில் முற்றுகையிட்டு தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகின்றனர்.
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சருமான ஓ.ராஜகோபால், கோவைமாவட்டத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்து பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, சேலம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜாராம் போட்டியிடும் தொகுதி உள்ளிட்டஅவரது கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் லட்சுமணனுக்காக ஆதரவு திரட்டினார்.












Click it and Unblock the Notifications