ஜெ.வுடன் பிரசாரம் செய்ய விருப்பமில்லை .. சோனியா பயணம் ரத்து
சென்னை:
சிறைத்தண்டனை காரணமாக தேர்தலில் நிற்க முடியாத அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோடு சேர்ந்து பிரசாரம் செய்வதில்விருப்பம் இல்லாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தனது தமிழக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து விட்டார்.
தமிழகத்தில், 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்ய சோனியா வருகிறார் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ரத்துசெய்யப்பட்டு விட்டது. பாண்டிச்சேரியில் மட்டுமே சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார்.
தற்போதைய புதிய திட்டத்தின் கீழ் கேரளத்தில் பிரசாரம் செய்து வரும் சோனியா அது முடிந்ததும், 8-ம் தேதி பாண்டிச்சேரி வருகிறார்.அங்கு உப்பளம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதில், மூப்பனார், இளங்கோவன், வாழப்பாடி ராமமூர்த்திஆகியோர் பங்கேற்கிறார்கள். அது முடிந்ததும் அவர் டெல்லி சென்று விடுகிறார்.
சோனியாவின் தமிழக பயணம் ரத்தானதற்கு ஜெயலலிதாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டதால் தேர்தலில் நிற்க முடியாத நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஊழல் புகார் காரணமாகதேர்தலில் நிற்க முடியாமல் போய் விட்ட ஜெயலலிதாவோடு சேர்ந்து பிரசாரம் செய்ய சோனியா விரும்பவில்லை என்றுகூறப்படுகிறது.
மேலும், கடந்த தேர்தலில் தன்னை நெடு நேரம் மேடையில் காக்க வைத்த ஜெயலலிதாவோடு மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்யசோனியா விரும்பவில்லை.
மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 15 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவேதான் வந்து பிரசாரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பெரிய மாறுதல் ஏற்படப் போவதில்லை என்றும் சோனியா கருதுவதாகத்தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் தமிழகத்தை புறக்கணித்து விட்டார்.












Click it and Unblock the Notifications