"பிள்ளையப் பெத்தா கண்ணீரு": தாமரைக்கனி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ தாமரைக்கனியும், அவருடைய மகன் இன்பத்தமிழனும்போட்டி பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
இத்தொகுதியில் அதிமுக சார்பாக இன்பத்தமிழன் போட்டியிடுகிறார். அதிமுகவில் சீட் கிடைக்காததால்,சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் தாமரைக்கனி.
தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வரும் நிலையில், வத்திராயிருப்பு பகுதிகளில் அவர்கள் இருவரும் போட்டி போட்டுபிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருவரையொருவர் தாக்குவதற்கு வசதியாக, பழைய சினிமாப் பாடல்கள் இருவருக்கும் உதவிவருகின்றன."தென்னையப் பெத்தா இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீரு" என்ற பாடலை ஒலிபெருக்கியில்போட்டு தாமரைக்கனி பிரசாரம் செய்தார்.
அதற்குப் பதிலடியாக இன்பத்தமிழன் "நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்" என்ற எம்ஜிஆர்பாடலைப் போட்டு ஓட்டு சேகரித்தார்.
இரு தரப்பினரும் இப்படி எதிர்ப்பாட்டுகள் போட்டு ஓட்டு சேகரித்து வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது. பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications