இந்தியா முழுவதும் ஞானவாணி கல்வி ஒலிபரப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

இந்தியா முழுவதிலும் "ஞானவாணி என்ற கல்வி ஒலிபரப்பை பண்பலை வரிசையில் துவக்க இந்திரா காந்திதிறந்தவெளிப் பல்லைக் கழகம் முடிவு செய்துள்ளது.

கோவையில் இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கில் மின்னணு ஊடகச் மையத்தின்இயக்குநர் ஸ்ரீதர் பேசியதாவது:

இந்தியா முழுவதிலும் பண்பலை ரேடியோ மூலம் 24 மணி நேரம் செயல்படக் கூடிய ஞானவாணி என்றரேடியோவைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்தியா முழுவதிலும் இத்தகைய மையங்கள் 40ஏற்படுத்தப்படும்.

அடுத்த 3 மாதங்களில் கோவையில் இது செயல்படத் தொடங்கும். தற்போதுள்ள அந்தந்த இடங்களில் உள்ளவானொலி நிலையங்கள் வழியாக இந்த ஒலிபரப்புத் துவங்கும். இதனால் புதிதாக அமைக்கும் செலவு இல்லை.

இந்த ஒலிபரப்பு முதலில் 6 மணி முதல் 8 மணி நேர ஒலிபரப்பாக இருக்கும். அடுத்த சில மாதங்களில் 24 மணிநேரம் செயல்படும் ஒலிபரப்பாக மாறும். இதில் தனியார் நிறுவனங்கள் தயாரித்து அளிக்கும் நிகழ்ச்சிகளும்இடம் பெறும்.

இது தவிர 15 கிலோ மீட்டர் அளவிற்கு ரேடியோ ஒலிபரப்ப அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அரசிடம் அனுமதிகிடைத்தால் இத்தகைய சமுதாய ரோடியோ ஒலிபரப்பு தொடங்கப்படும். இதன் மூலம் மக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+