புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் கைது
கோவை:
பிரசார வேன் மீது மோதிய லாரி டிரைவரை தாக்கிய வழக்கில் புதிய தமிழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் 10 பேர்கைது செய்யப்பட்டனர்.
கோவை, மாவட்டத்தில் உள்ள வால்பாறைத் தொகுதியில் புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமிபோட்டியிடுகிறார். இங்கு இவர் இரண்டு நாட்களாகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
புதன்கிழமை பிரசாரத்தை முடித்துக் கொண்டு மலைப் பகுதியிலிருந்து தரைப் பகுதிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். பின்னால், அவரது பிரசார வேனில் தொண்டர்கள் வந்து கொண்டிருந்தனர்.
கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட வால்பாறை மலைப்பகுதியில் 3 வது வளைவில் அவர்கள் இறங்கிக்கொண்டிருந்தபோது எதிரே மலைப் பகுதிக்குச் செல்ல லாரி ஒன்று வளைவில் திரும்பியபோது பிரசார வேன் மீதுமோதியது. இதையடுத்து லாரியைத் தடுத்து நிறுத்திய தொண்டர்கள், அதன் டிரைவர் ரமேஷை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த ரமேஷ், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேட்பாளரின் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து வேனில் வந்த 10 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications