பு.நீ.க. அதிருப்தி வேட்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்
சென்னை:
கட்சி கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டியிட்டதற்காக புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர்கள் பேர் அக்கட்சியிலிருந்துநீக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 10ம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சிதி.மு.க.கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது.
தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிருப்தியடைந்த சிலர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். சுயேட்சையாக போட்டியிடுபவர்களைகட்சியிலிருந்து நீக்குவதாக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய நீதிக்கட்சி வேட்பாளர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. இதுகட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
எனவே அவர்கள் கட்சியின் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகின்றனர்.
திருவள்ளூரில் போட்டியிடும் சச்சிதானந்தம், ஏ.கே.மணி, பொணமல்லூரில் போட்டியிடும் சி.எஸ்.சண்முகசுந்தரம், ரவிச்சந்திரன், சேகர்,பாலசுந்தரம், சென்னை கெளதமன், பொன்னேரியில் போட்டியிடும் வக்கீல் தேவராஜ், பள்ளிப்பட்டு வினாயகம், கரூரில்போட்டியிடும் எம்.ஜி.காமராஜ் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
இவர்களோடு கட்சியினர் எவரும் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.