என்தொகுதி எனக்கே: புதுவை முன்னாள் முதல்வர்
பாண்டிச்சேரி:
வரும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றிபெறப் போவதாக புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் கூறியுள்ளார்.
திமுக சார்பாக கடந்த 5 முறை நெல்லித்தோப்புத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.
1985-லிருந்து இன்றுவரை இத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் ஜானகிராமன். 1996 தேர்தலில் திமுக-தமாகா-சிபிஐ கட்சிகள்கொண்ட அமைச்சரவையை அமைத்து முதல்வரானார்.
ஆனால் தமாகா தன்னுடைய ஆதரவை வாபஸ் பெற்ற பின்னர், இவர் முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது. 1990-ல் ராமச்சந்திரன் அமைச்சரவையில்பொதுப்பணித்துறை அமைச்சராக ஜானகிராமன் இருந்தார்.
தான் இந்தத் தொகுதி மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்திருப்பதால், தன்னையே இம்மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன்கூறுகிறார் ஜானகிராமன்.
நெல்லித்தோப்புத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஜானகிராமனை எதிர்த்து அதிமுக சார்பில் டாக்டர். நன்னன், காங்கிரஸ் சார்பில் புவியரசு ஆகியோர் களத்தில் உள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளில் காங்கிரஸ் இப்போதுதான் முதன்முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறது. தோழமைக் கட்சியாக இருந்த அதிமுகவிற்குத்தான்இவ்வளவு நாளும் சீட் கொடுக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.