பண்பட்ட அணி அ.தி.மு.க. அணி: நல்லகண்ணு புகழாரம்
திருப்பூர்:
மழைக்கு முளைத்த காளான் போன்ற கட்சிகள் தான் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. பாரம்பரியமிக்க, பண்புள்ள, மதச்சார்பற்ற அணி தான் அ.திமுக.அணி என இ.கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பொது செயலர் நல்லகண்ணுகூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் நல்லகண்ணு திருப்பூரில்பேசியதாவது:
தமிழகத்தில் இரண்டு அணிகள் தான் போட்டியிடுகின்றன. இந்த அணிகளுக்கு என்றுதனிச் சிறப்பு உள்ளது.
அ.திமு.க அணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அணியில் நூற்றாண்டுக்கு மேல்பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. பண்பட்ட தமிழ் மாநிலகாங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது.சுதந்திரப் போராட்ட விடுதலைக்காவும், தொழிலாளர்களின் விடுதலைக்காகவும்உழைத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
தி.மு.க .அணியில் உள்ள கட்சிகளுக்கு என்ன அடிப்படை உரிமைகள் உள்ளது?. மதஅடிப்படையில் இயங்கி வரும் பாரதிய ஜனதாக் கட்சியைத் தவிர வேறு எந்தக்கட்சியும் இல்லை.
தி.மு.கவினர் நேற்றைய மழைக்கு இன்று முளைத்த காளான் போன்ற கட்சிகளைச்சேர்த்து கூட்டணி அமைத்துள்ளனர். இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் தோன்றியகட்சிகள் தான்.
தி.மு.க ஆட்சியில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் நசிந்து போய் உள்ளனர்.விசைத்தறிகள் பாதிப்படைந்துள்ளன. வெளிநாட்டு இறக்குமதிக் கொள்கையால்விவசாயிகள் சீரழிவிற்குள்ளாகியுள்ளனர் என்றார் நல்லகண்ணு.