For Daily Alerts
Just In
வெயிலைக் குறைக்கக் கோரி 1008 பால் குட அபிஷேகம்
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் 1008 பால் குட அபிஷேகம்திங்கள்கிழமை நடக்கிறது.
முண்டக் கண்ணி அம்மன் கோவில் மிகவும் பழமையானது. சிலைகள் வைத்து வழிபாடு துவங்குவதற்கு முன்பேஇந்தக் கோவில் உருவாகி விட்டதாக கூறப்படுகிறது. அதாவது உருவ வழிபாட்டுக் காலத்திற்கு முந்தையது இக்கோவில்.
இங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்கக் கோரியும், மழை வேண்டியும் 1008 பால் குட அபிஷேகம்நடத்தப்படவுள்ளது. காலை 7 மணிக்கு பால் குடங்கள் மாட வீதிகள், வழியாக ஊர்வமலமாக கொண்டு வரப்படும்.பின்னர் அம்பாளுக்கு வேத பாராயணத்துடன் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் விசேஷபூஜைகளும் செய்யப்படும்.
Comments
Story first published: Sunday, May 6, 2001, 5:30 [IST]