எஸ்.எம்.கிருஷ்ணா பிரச்சாரத்தில் அதிமுகவினர் ஆவேசம்
கோவை:
ஜெயலலிதா பேரைச் சொல்லி கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஓட்டுக் கேட்காததால் கோவை மேற்குத்தொகுதி பொதுக் கூட்டத்தில் அதிமுகவினர் ஆவேசமடைந்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
நீலகிரி மற்றும் கோவையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகா முதல்வர் எம். கிருஷ்ணா பிரச்சாரம்மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின்போது கோவை மேற்குத் தொகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியதாவது:
இந்த தொகுதியில் போட்டியிடும் சி.டி தண்டபாணி எனக்கு நெருங்கிய நண்பர். தாழ்த்தப்பட்ட மற்றும்ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்கும் தகுதிபெற்றிருந்தார். ஆனால், சூரியன் அஸ்தமாகும் சமயத்தில் அவர் இனி அமைச்சாராக மாட்டார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில், தொழில்துறைகள் மிகவும் பாதிப்படைந்து விட்டது. பஞ்சாலைத்தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். மேலும்,மத்திய அரசு மேற்கொண்ட சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
தமிழகத்தில் காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெறும். ஆட்சியில் பங்கேற்கா விட்டாலும், "காவல் நாயாக(வாட்ச் டாக்) இருந்து ஊழல் நடக்காமல் தடுப்போம். 5 மாநிலங்களிலும் ஏற்படும் மாற்றம் பா.ஜ.,வுக்கு வீழ்ச்சியாகஇருக்கும் என்றார்.
கூட்டத்தின் இறுதி வரை ஜெயலலிதாவின் பெயரை கிருஷ்ணா சொல்லாததால், அதிமுக தொண்டர்கள்ஆவேசமடைந்தனர். ஜெயலலிதாவைப் பற்றி பேச வேண்டும் என்றனர்.
பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட கிருஷ்ணா பேச்சை முடித்த பின்னர் மீண்டும் 3 நிமிடங்கள் பேச்சைத்தொடர்ந்தார். அப்போது காலையில் பத்திரிக்கையளர்களிடமே கூறி விட்டேன். ஜெயலலிதா முதல்வராவார்எனக் கூறி சென்று விட்டார்.












Click it and Unblock the Notifications