13 ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும்
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 13 ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என்று தமிழகதலைமை தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக சட்டசபைத் தேர்தல் மே 10 ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரச்சாரம் வரும் 8 ம் தேதி மாலை 4 மணியுடன்முடிவடைகிறது.
10 ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடக்கும். 4 மணிக்கு க்யூவில் நிற்பவர்கள்ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவர். 4 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் க்யூவில் கடைசியில்நிற்பவர்களிடம் ஒரு சீட்டு கொடுக்கப்படும்.
அந்த சீட்டு வைத்திருப்பவருக்கு அடுத்ததாக யாராவது ஓட்டுப்போட வந்தால் அவருக்கு ஓட்டுப்போட அனுமதிகிடையாது.
வாக்கு எண்ணிக்கை வரும் 13 ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படும். பிற்பகல் 3 மணிக்கு 234தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிடும்.
இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் வாக்கு எண்ணிக்கை விரைவில்முடிந்து விடும் என்றார் சாரங்கி.