வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
திங்கள்கிழமை காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாகக் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்நிகழ்ச்சி ஆண்டுதோறும் கோலாகலமாக நடந்து வருகிறது.
தன் தங்கையான மீனாட்சியம்மனின் திருக்கல்யாணத்துக்காக கோவிலில் இருந்து புறப்படுவார் கள்ளழகர். ஆனால்அவர் வைகை ஆற்றில் இறங்கும்போது, தங்கையின் திருமணம் முடிந்த செய்தி அறிந்து வருத்தத்துடன் மீண்டும்அழகர் கோவிலுக்கே திரும்பி விடுவார்.
இந்தச் சம்பவத்தை நினைவுகூறும் வகையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா, சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும்.
அதன்படி திங்கள்கிழமை காலை 6.30 மணிக்குமேல் அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்து, வைகைஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.












Click it and Unblock the Notifications