கிணற்றில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கிரிக்கெட் விளையாடியபோது 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.
கோவை பொன்னை ராஜபுரத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மகன் சிவக்குமார் (27). இவர் திங்கள்கிழமைமதியம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது பந்து கிணற்றின் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையில் மாட்டிக் கொண்டது. இந்த பந்தை எடுக்கஅவர் மரத்தின் மீது ஏறினார்.
பந்தை எடுக்க முயன்றபோது அவர் கால்தவறி கிணற்றிற்குள் விழுந்தார். கிணறு 70 அடி ஆழம் இருந்ததால்,யாரும் அவரை மீட்க முயற்சி எடுக்கவில்லை.
இந்த நிலையில் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புப் படையினர்விரைந்து வந்து கயிற்றில் இறங்கி சிவக்குமாரை மீட்டனர். கிணற்றில் 6 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால்,சிவக்குமார் லேசான கயத்துடன் உயிர் தப்பினார்.












Click it and Unblock the Notifications