பெரம்பலூரில் ஐஸ் கட்டி மழை
பெரம்பலூர்:
ண்பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை ஐஸ் கட்டி மழை பெய்தது. ஆங்காங்கே தெருக்களில் விழுந்து கிடந்த ஐஸ்கட்டிகளைப் பொறுக்கி சிறுவர், சிறுமியர் உற்சாகமாக விளையாடினர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியதைத் தொடர்ந்து பெரம்பலூரில் சனிக்கிழமை 103 டிகிரி வெயில் கொளுத்தியது.வெயில் அதிகம் இருந்ததால் தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென்று கடும் மழை பெய்தது. ஐஸ் கட்டிகள் தெருக்களில் விழுந்தன.பெரம்பலூர் அருகே பல மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இதனால் பெரம்பலூர் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பெரம்பலூர்நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் சாய்ந்து விழுந்தன.
இதே போல் பெரம்பலூரை அடுத்துள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் என்று ஐஸ் கட்டிமழை பெய்தது. இதையடுத்து இந்த கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். இங்குள்ள சிறுவர்,சிறுமியர் ஐஸ் கட்டிகளை எடுத்து அங்கும், இங்கும் வீசி விளையாடினர்.












Click it and Unblock the Notifications