பெருந்துறை அருகே ஜீப்-பஸ் மோதல்: 4 பேர் பலி
ஈரோடு:
கோவை நோக்கி வந்த பஸ்சும், ஜீப்பும் பெருந்துறை அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், நான்கு பேர்அதே இடத்தில் இறந்தனர்.
தர்மபுரி அருகே உள்ள ஒசூரிலிருந்து திங்கள்கிழமை இரவு ஒரு பஸ் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.அப்போது ஊட்டியிலிருந்து ஒரு ஜீப்பில் நான்குபேர் வந்து கொண்டிருந்தனர். ஜீப்பும், பஸ்சும் பெருந்துறைஅருகே உள்ள கள்ளியம்பாளையம் புதூர் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஊட்டி ஓட்டல் அதிபர் மகன் சர்புதீன் (29), மில்சத் அகமது (28), குத்புதீன் (33), அப்துல் ரஹ்மான்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது தவிர ஜீப்பில் வந்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.