அத்வானி பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு
கோவை:
அத்வானி பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதையடுத்து அவரது திருப்பூர் பயணம் தாமதமானது.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அத்வானி தமிழகம்,பாண்டிச்சேரியில் இரண்டு நாள் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாண்டிச்சேரி, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, திருப்பூரில்போட்டியிடும் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக மயிலாடுதுறையில் பிரச்சாரம் மேற்கொண்ட அத்வானி கிளம்பும்போது, தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக ஹெலிகாப்டர் புறப்படவில்லை. இதனால், அவரது பிரச்சாரப் பயணம் தாமதமானது.
சுமார் 2 மணிநேரத்திற்குப் பின்னர் ஹெலிகாப்டர் புறப்பட்டு திருப்பூரை அடைந்தது.
திருப்பூரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த பின்னர் 3.30 மணி அளவில் பொதுக் கூட்டத்தில் பேசினார். பின்னர் 4மணிக்கு அவர் புறப்பட்டார்.