101 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்
சென்னை:
மே 13ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் முழுவதும் 101 மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதிலுமுள்ள 234 தொகுதிகளுக்கும் திருச்சி மக்களவைக்கும் சேர்த்து 56,285 மின் வாக்குப்பதிவுஎந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
தமிழகம் முழுவதும் 4 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்களின் எண்ணிக்கை 2 கோடியே38 லட்சம் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சம்.
தேர்தல் பணிகளுக்காக மொத்தம் 3 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். 89,085 பேர் பாதுகாப்புப் பணிகளுக்காகஈடுபடுத்தப்படுவார்கள்.
மே 10ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்.
மே 13ஆம் தேதி அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகும். பிற்பகல் 1 மணிக்குள் தேர்தல்முடிவுகள் தெரிய வரும் என்றார் சாரங்கி.