பிரச்சாரம் ஓய்ந்தது .. வியாழக்கிழமை வாக்குப்பதிவு
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்தது. மே 10ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.
தமிழக சட்டசபைக்கு மே 10-ம் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. பாண்டிச்சேரி சட்டசபைக்கும் அன்றே தேர்தல்நடக்கிறது. இதற்கான தேர்தல் பணிகள் ஏப்ரல் 16ம் தேதி துவங்கியது. அன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.தேர்தல் பிரசாரம் அன்றே பல கட்சிகளால் துவக்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 4 மணியுடன் மைக் ஓசைகள் ஓய்ந்தன. ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓய்வுக்குச்சென்றன. வாக்காள பெருமக்களே, வாக்களிப்பீர் என்ற முழக்கம் ஓய்ந்தது.
4 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறைத்தண்டனை என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பதால் 4மணிக்கு மேல் தேர்தல் பிரசாரத்தை எங்குமே காண முடியவில்லை.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை சென்னையில் முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் கடைசி நிமிஷ பிரசாரத்தில்இறங்கினர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல் முறையாக சென்னையில் பிரச்சாரத்தில்ஈடுபட்டார். இதுவரை சென்னையில் பிரச்சாரமே அவர் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினும் செவ்வாய்க்கிழமை நகர் முழுவதிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications