கள்ள ஓட்டு: மதுரை, கோவையில் 5 வாகனங்கள் பறிமுதல்
சென்னை:
மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் கள்ள வோட்டுப் போடுவதற்காக ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த 5வாகனங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில்வாக்குப்பதிவு ஆரம்பித்து மிகவும் அமைதியாக நடந்து வருகிறது.
சென்னையில் காலை 9 மணி வரை 7 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. திருச்சியில் காலை 9 மணி வரை 3 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
கோவையில் கள்ள வோட்டு போடுவதற்காக ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த 2 ஆட்டோக்கள், ஒரு கார், ஒரு வேன் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதே போல் மதுரையில் கள்ள வோட்டுப் போடுவதற்காக ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பஸ்சைப் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.
இதுவரை அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. மீறி அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாகசம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் சாரங்கி.












Click it and Unblock the Notifications