சென்னையில் 21 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு
சென்னை:
சென்னை நகரில் மட்டும் 20 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால்வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்களிப்பது தேர்தல் அதிகாரிகளுக்கும் முற்றிலும் புதியதுஎன்பதால் அவர்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்வதில் சிரமம் இருந்தது.
பின்னர் தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்தைச் சரிசெய்த பின்பே பொதுமக்களால் வாக்களிக்க முடிந்தது.
அதுவைரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு:
மதுரை மாவட்டம் சமயநல்லூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்தனர்.
யு.என்.ஐ.