3 மணி வரை 50 சதவீத வாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே உள்ள நிலையில் 50 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் தமிழக தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் தேர்தல் நடந்து வருகிறது.ஆங்காங்கே நடந்த ஒரு சில சம்பவங்களைத் தவிர அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

மதுரை, கோவை மாவட்டங்களில் கள்ள வோட்டுப்போட ஆட்களை அழைத்து வரப்பட்ட வாகனங்களைப்போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ள வோட்டுப்போட ஆட்களுடன் வந்த 3 டிராக்டர்கள், ஒரு வேன், 2ஆட்டோக்களும், திருவாரூர் மாவட்டத்தில் கள்ள வோட்டுப்போட ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த 2 டாடாசுமோ வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அசம்பாவிதச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரமணியம் கூறுகையில், சென்னையில் மிகவும் அமைதியாகவும்,விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்குப்பதிவு நடந்து வருவது குறித்து உடனுக்குடன் தமிழகதலைமை தேர்தல் ஆணையத்துக்குத் தகவல்கள் அனுப்பி வருகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+