ஜெயலலிதா, ஸ்டாலின் வாக்களித்தனர்
சென்னை:
தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை என்றுஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வியாழக்கிழமை காலைவாக்களித்தார்.
பின்னர் வாக்குச்சாவடி வாசலில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை. அதனால் வாக்குப்பதிவு மிகவும் தாமதமாக நடந்ததுஎன்றார்.
ஓட்டுப் போட்டார் ஸ்டாலின்:
ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்த சென்னை நகர மேயர் ஸ்டாலின்கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று ஜெயலலிதா கூறுவதுபொய்யான குற்றச்சாட்டு.
அவருக்கு தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயம் உள்ளதால் அவ்வாறு கூறியுள்ளார் என்று ஸ்டாலின்,ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.