கருணாநிதி, மூப்பனார் ஓட்டு போட்டனர்
சென்னை:
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில்முதல்வர் கருணாநிதி தனது குடும்பத்துடன் வந்து ஓட்டுப்போட்டார்.
ஓட்டுப்போட்டுவிட்டு அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பேஇல்லை. சட்டசபைத் தேர்தல் மிகவும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றி பெறும். பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்களால் கோளாறு ஏற்பட்டு வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுஅவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்து அதைக் குறை கூறிவருகிறார் ஜெயலலிதா என்றார்.
கருணாநிதியுடன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் முரசொலி மாறனும் வந்து ஓட்டுப் போட்டார்.
கருணாநிதி போட்டியிடும் கடைசித் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வாக்குச்சாவடி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஓட்டுப் போட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மதச்சார்பற்றகூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணி எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று கேட்கிறார்கள்.எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று கணித்துக் கூற நான் ஜோதிடர் அல்ல என்றார்.












Click it and Unblock the Notifications