For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை: ஓட்டுப்போட அனுமதி மறுப்பு-மக்கள் சாலை மறியல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர் பெயர் இல்லாத காரணத்தால் பல வாக்காளர்களுக்கு ஓட்டுப் போட அனுமதிமறுக்கப்பட்டது. இதையடுத்து வாக்காளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரையில் வியாழக்கிழமை காலை 9 மணி வரை 10 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.

திருமங்கலம் தொகுதியில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க ஆரம்பித்தனர். ஆண் வாக்காளர்களை விட பெண்வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

அவனியாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில்இடம்பெறவில்லை.

இதனால் அவர்களை வாக்குச்சாவடிக்குள் தேர்தல் அதிகாரி விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலைமறியலில்ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்து விட்டனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X