இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் போர்ப் பயிற்சி
இஸ்லாமாபாத்:
தன்னுடைய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானும் போர் ஒத்திகையை ஆரம்பித்துள்ளது.
கடந்த வாரம் ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் இந்தியா மேற்கொண்ட போர்ப் பயிற்சியின்பிரதிபலிப்பாக பாகிஸ்தானும் போர் ஒத்திகையை ஆரம்பித்திருப்பதாக பாகிஸ்தானிய அதிகாரிகள்கூறினர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் பல்வேறு நிலைகளிலும் உள்ள வீரர்கள் இத்தகைய போர் ஒத்திகையைஆரம்பித்துள்ளனர். வழக்கமாக நடைபெறும் போர்ப் பயிற்சியின் ஒரு பகுதிதான் இந்தப் போர் ஒத்திகைஎன்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.
1991ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 60 நாட்களுக்கு முன்பேஇந்தியாவிடம் தெரிவித்து விட்டுதான் இந்தப் போர் ஒத்திகை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றுபாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
கடந்த மே 5ஆம் தேதி ராஜஸ்தான் பாலைவனத்தில் பாகிஸ்தான் எல்லையில் இந்த மிகப் பெரிய அணுஆயுதப் போர் ஒத்திகையை இந்தியா தொடங்கியது. 13 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா நடத்தும் இந்தப்போர் ஒத்திகைக்கு "முழு வெற்றி என்ற பெயரிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications