தமிழகத்தில் 55 சதவீத வாக்குப் பதிவு
சென்னை:
தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 55 சதவீத வாக்குப் பதிவு நடந்துள்ளது.
1977ம் ஆண்டுக்குப் பின் நடந்த 7 சட்டசபைத் தேர்தல்களில் மிகக் குறைவான வாக்குப் பதிவு நடந்த தேர்தல் இதுதான்.
1996ம் ஆண்டுத் தேர்தலில் 64.8 சதவீத வாக்குப் பதிவு இருந்தது. 1999ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில்கூட 60 சதவீதத்துக்கும் மேல் வாக்குப் பதிவு இருந்தது. ஆனால் இம்முறை இது மிகவும் குறைந்துவிட்டது. இதற்குமுக்கியக் காரணம் வெயில் என்றால் அது மிகையாகாது.
வியாழக்கிழமை காலையில் 7 மணிக்கு மிகப் பரபரப்பாக தொடங்கிய வாக்குப் பதிவு வெயில் ஏற ஏற குறைந்தது.முதலில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று வாக்களித்தனர். 11 மணியளவில் 35 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.
பின்னர் கடும் வெயில் அடிக்கத் தொடங்கியதையடுத்து மக்கள் வாக்குச் சாவடிக்கு வருவதும் குறைந்தது. சுமார்1.30 மணி வரை வாக்குச் சாவடிகள் காயந்து கிடந்தன. பின்னர் 2 மணியளவில் வாக்குச்சாவடிகள் மீண்டும்பரபரப்பாயின. மக்கள் மீண்டும் வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
கடைசி நேரத்தில் சுமார் 15 முதல் 20 சதவீத வாக்குகள் பதிவாயின. மொத்தத்தில் 55 சதவீத வாக்குகள் தான்பதிவாகியுள்ளன.