நண்பகல் வரை 35 சதவீத ஓட்டுப்பதிவு
சென்னை:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் நண்பகல் வரை 35 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளது.
பல தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவுபாதிக்கப்பட்டது.
மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கூட ஆயிரக்கணக்கானபொதுமக்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்படவில்லை.
வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் அவர்களை வாக்களிக்கஅனுமதிக்கவில்லை.
இதனால் பல தொகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சில தொகுதிகளில் டென்டர்முறையில் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கிய பின் வாக்காளர்கள் சமாதானமடைந்தனர்.
நீலகிரி தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்துவாக்களித்தனர். இங்குள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெண் வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்துஓட்டுப்போட்டனர்.
தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 35 சதவீத வாக்குகள் பதிவாயின.