கால்பந்தாட்ட மைதான வன்முறையில் 120 பேர் பலி
கானா:
கானாவில் புதன்கிழமை இரண்டு கால்பந்தாட்டக் குழுக்களிடையே நடந்தகால்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட வன்முறை, கூட்ட நெரிசலில் சிக்கி 120பேர் இறந்தனர்.150 பேர் காயமடைந்தனர்.
கானாவில் இருக்கும் அக்ரா என்ற இடத்தில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில்இரண்டு உள்ளூர் கால்பந்தாட்ட குழுக்களிடையே புதன்கிழமை கால்பந்தாட்ட போட்டிநடந்தது. இந்த போட்டியை காண பெருந்திரளான கால்பந்தாட்ட ரசிகர்கள்கூடியிருந்தனர்.
போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோல்வியடையத்துவங்கிய அணியின் ஆதரவாளர்கள் கோபத்தில் விளையாட்டரங்கில் இருந்தநாற்காலிகளை உடைத்து வன்முறையில் இறங்கினர். இதனால் அங்கு பதட்டம்நிலவியது.
சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைகுண்டு விசினர். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. கண்ணீர் புகைகுண்டுகளிலிருந்து தப்பிக்க பார்வையாளர்கள் ஓடத் தொடங்கியதால் அங்கு நெரிசல்ஏற்பட்டது.
விளையாட்டரங்கின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் பார்வையாளர்கள் வெளியேசெல்ல முடியாமல் தவித்தனர். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்க 120பேர் இறந்து போனார்கள்.150 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications