திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு
திருச்சி:
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால்ஓட்டுப்பதிவு ஆரம்பமாவதில் காலதாமதம் ஏற்பட்டது.
திருச்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு ஆரம்பமாவதற்கு முன்பே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துவாக்களிக்கத் தொடங்கி விட்டனர். வாக்குப்பதிவு தொடங்கும் நேரமான காலை 7 மணிக்கு முன்பே வாக்குச்சாவடிகளில் மக்கள்கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.
திருச்சியில் பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வருகின்றனர். அவர்களுடன் ஓட்டுப்போடத் தகுதியுள்ளஅவர்களது மகன், மகள்களும் வந்திருந்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு:
தில்லைநகர் கே.ஏ.பி.விஸ்வநாதம் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிவர இயங்காதகாரணத்தால் அங்கு வாக்குப்பதிவு ஆரம்பிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அங்கு 45 நிமிடம் காலதாமதமாக வாக்குப்பதிவுஆரம்பித்தது.
அங்குள்ள தேர்தல் அதிகாரிகளால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்ய முடியவில்லை. சுமார் அரை மணிநேரம் அவர்கள் முயற்சித்தும் பலனில்லாத காரணத்தால் உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு மின்னணுவாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டது.
மத்திய மின்துறை முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மரணமடைந்ததையடுத்து திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குஇடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.