தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வியாழக்கிழமை சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.

ஐந்து மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடப்பதையொட்டி அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்பட ஐந்து மாநிலங்களிலும் 823 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. ஐந்து மாநிலங்களிலும்சேர்த்து மொத்தம் 5000 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களிலும் இம்முறை பெரிய அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாலும், வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாலும்இந்த முறை கள்ள ஓட்டுக்கள் போடுவது தடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது.

தமிழகத்தில் பதட்டம் உள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 6730 தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+