கோவையில் அமைச்சரை கெரோ செய்த வாக்காளர்கள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுப் போயிருந்ததால் ஆத்திரமடைந்த மக்கள்,விளையாட்டுத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை ஓட்டுப்போட விடாமல் கெரோ செய்தனர்.
இந்தச் சம்பவம் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஓட்டுப்போட வந்த ஆவாரம்பாளையம் வாக்குச்சாவடியில் நடந்தது. பின்னர்போலீஸார் வந்து சமாதானப்படுத்தியபின் வாக்காளர்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர். அதற்குப்பின் அமைச்சர்வாக்களித்தார்.
முன்னதாகக் கோவை நகரில் பிற்பகல் 3 மணி வரை 60 சதவீத வாக்குகளும், கிராமப்புற பகுதிகளில் 50 சதவீத வாக்குகளும்பதிவாயின.












Click it and Unblock the Notifications