அசாமில் கண்ணிவெடி வெடித்ததில் 5 வீரர்கள் பலி
கவுஹாத்தி:
அசாமில் கண்ணி வெடி வெடித்ததில் 5 புறக்காவல் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் என அரசு அதிகாரிகள்வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், தீவிரவாத இயக்கமான உல்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்வியாழக்கிழமை தேர்தல் அதிகாரிகளுக்கும், வாக்குப் பெட்டிகளுக்கும் காவலாக சென்று கொண்டிருந்த பாதுகாப்புபடையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் கவுஹாத்தியிலிருந்து 420 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் சோனாரி என்ற இடத்தில் நடந்தது.
கண்ணிவெடி வெடித்ததில் 3 எல்லை பாதுகாப்பு படையினரும், 2 அசாம் போலீசாரும் கொல்லப்பட்டனர். 3 பேர்பலத்த காயமடைந்தனர்.
தேர்தல் தினமான வியாழக்கிழமை அசாமில் பல்வேறு இடங்களில் உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11பேர் கொல்லபட்டனர். இதில் 7 பேர் புறக்காவல் படையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் திப்ருகார் பா.ஜ.க. வேட்பாளர் ஜெயுந்தா தத்தா என்பவரும் ஒருவர்.
தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி திப்ருகார் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த தொகுதியைதவிர 125 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இது தவிர தேர்தலையொட்டி நடந்த வன்முறை சம்பவங்களில்180 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்களுக்கிடையிலும் வியாழக்கிழமை நடந்த தேர்தலில் 65 சதவிகிதம் பேர்வாக்களித்துள்ளனர் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.