நீலகிரியில் 11 வயது சிறுவனுக்கு வாக்குரிமை?
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் 11 வயது நிரம்பிய சிறுவனுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. வியப்பில் ஆழ்ந்ததேர்தல் அதிகாரி, அவரை ஓட்டுப் போட அனுமதிக்கவில்லை.
நீலகிரி மாவட்டம், கொலக் கொம்பையில் இத்தலார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குதினேஷ்குமார் என்ற சிறுவன் வாக்களிக்க வந்தார்.
அந்த சிறுவன் தனக்கு ஓட்டுரிமை உள்ளது என வாக்காளர் பட்டியிலைக் காண்பித்து ஓட்டுரிமை உள்ளது என்றார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தேர்தல் அதிகாரி அவனது அடையாள அட்டையை வாங்கிப் பார்த்தார். அதில்33 வயது என்று இருந்தது. பின்னர் அவனை மிரட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 96ம் ஆண்டும் இதே போன்று அவனுக்கு ஓட்டுரிமை இருந்தது. அப்போது 28 வயது எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போதும் அவனுக்கு ஓட்டுரிமை இருந்துள்ளது.
இது குறித்து இவரது தந்தை திலகர் கூறுகையில், கடந்த முறை இவன் வாக்களிக்க வந்தபோது நான் இது குறித்துகிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்திருந்தேன், ஆனால், இந்த முறையும் அவன் பெயரை நீக்காமல்வாக்களார் பட்டியலில் விட்டு விட்டனர். இதனால், இப்போதும் அவனுக்கு ஓட்டுரிமை உள்ளது என்றார்.